கவிச்சோலை - வாசகர் கவிதை
Kavicholai reader's poem
அவளை
ஆலயத்தில்
இமைக்காமல் பார்த்த
ஈர நினைவுகள்
உலராது
ஊஞ்சலாடுகிறது
என் மன மாளிகையில்
ஏக்கத்தில்
ஐயறிவும்
ஒற்றைக் காலில்
ஓங்காரத் தவம் கிடக்கிறது
ஔவியம் தான் எனக்கு
ஃ என்ற அவள் நெற்றிப் பொட்டில்
குட்டி நிலா
குறையாத புன்சிரிப்பு
குற்றாலக் கருமேகக் கூந்தல்
கருவறைக் கடவுள்
கண் விழிக்கும் அழகு
தவம் கிடக்க வந்த இடத்தில்
கண்ட தவம் நீ!!
ஆலயம் தொழுவது
சாலவும் நன்று, என்ற
ஔவை சொல்
புரிந்தது இன்று
ஆன்மா இலயிக்க ஆலயம் வந்தேன்
ஆணவம் அழித்த உன் முகம் கண்டேன்
உன்னைப் போலொருத்திக்கு
ஏங்குகின்றாள் என் மனைவி
என்னுள்ளும் படர்கிறது ஏக்கத் தீ!!
பெண் பிள்ளை இல்லை என்று.........
-சங்கியா யுவராஜன்.
( கதை, கட்டுரை, கவிதை என்று நீங்கள் எழுதும் உங்கள் படைப்புகளையும் வாசகர் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று விரும்பினால் tamilreportermedia@gmail.com என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.)
குறிப்பு: நீங்கள் அனுப்பும் படைப்பு உங்களால் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும்.