RSS பேரணி நடத்த காவல்துறை அனுமதி

Police permission to hold RSS rally

RSS பேரணி நடத்த காவல்துறை அனுமதி

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு  அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  நவம்பர் 6ம் தேதி ஞாயிறு அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கு ஏற்றவாறு செயல்பட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அக்.2 ம் தேதி நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை என்பதால் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் நீதிமன்றத்தை நாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து. ஆனாலும் சில மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக கொள்ளப்படும் என காவல்துறைக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.