போராட்டத்தில் இறங்கிய மக்கள்; மூன்றாவது முறையாக அதிபராகிறாரா ஜி ஜின்பிங்? - என்ன நடக்கிறது சீனாவில்?

சீன அதிபராக ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் கடந்த 2018-ம் ஆண்டில் நீக்கப்பட்டது. முன்னதாக சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர்கள் பதவியில் தொடர்ந்தது இல்லை. அப்படி 2012-ல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால்தான் ஜி ஜின்பிங்குக்கு அதிபர் பதவி கிடைத்தது.தற்போது ஜி ஜின்பிங் அதிபர் பதவியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் சீனாவில் தற்போதும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட நிலையில், சீனாவில் மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொருளாதார வளர்ச்சியும் குறைந்திருக்கிறது. இதனால் அங்கு எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. மேலும் அவர் கடைப்பிடித்து வரும் கோவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. சீன மொழியில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கும் பதாகையில், ``கொரோனா பரிசோதனை வேண்டாம், உணவு வேண்டும். லாக்டெளன் வேண்டாம், சுதந்திரம் வேண்டும். பொய்கள் வேண்டாம், கண்ணியம் வேண்டும். கலாசாரப் புரட்சி வேண்டாம், சீர்திருத்தம் வேண்டும். பெரும் தலைவர் வேண்டாம், ஓட்டுரிமை வேண்டும். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு" என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் இந்தப் பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதே பாலத்தில் தொங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு பதாகையில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத்துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் "I saw it" என்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டானது.. எனினும், இதற்கு காரணமானவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.இவ்வாறு ஒருபுறம் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங்கே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. அதாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடக்கும். மாதிரி படம் அப்போது அக்கட்சியின் புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். தற்போது ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச்செயலராகவும் உள்ளார். சீனாவில் அதிபர் பொறுப்பைவிடவும் கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, பீஜிங் கிரேட் ஹாலில் நேற்று தொடங்கியது. ஒரு வாரத்திற்கு இக்கூட்டம் நடைபெறும். இந்த மாநாட்டில் 2,300 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பலத்த கரகோஷங்களுக்கு இடையே ஜி ஜின்பிங் வருகை தந்தார். அப்போது உரையாற்றிய ஜி ஜின்பிங், ``ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தைவான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்தைவான் பிரச்னையில் சீன மக்கள்தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். சீனாவின் ஜீரோ கோவிட் நிலைப்பாடு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மக்களும், அவர்களின் உயிரும் நலனும்தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. அதனால் ஜீரோ கோவிட் உத்தி மூலம் சீனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகள் சீனப் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் சீனா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஒரு நவீன சோஷலிச சக்தியை கட்டமைக்க பாடுபடும்" என்றார்.மாதிரி படம் முன்னதாக நடைபெற்றுவரும் தேசிய மாநாட்டில் மீண்டும் ஜி ஜின்பிங்கே பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்றும், அதனடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஒருபுறம் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் சீனாவில் நடப்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன. `வீட்டுச் சிறையில் ஜி ஜின்பிங்... சீனாவில் ராணுவ ஆட்சி?' - உண்மையும் பின்னணியும்!

போராட்டத்தில் இறங்கிய மக்கள்; மூன்றாவது முறையாக அதிபராகிறாரா ஜி ஜின்பிங்? - என்ன நடக்கிறது சீனாவில்?

சீன அதிபராக ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் கடந்த 2018-ம் ஆண்டில் நீக்கப்பட்டது. முன்னதாக சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர்கள் பதவியில் தொடர்ந்தது இல்லை. அப்படி 2012-ல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால்தான் ஜி ஜின்பிங்குக்கு அதிபர் பதவி கிடைத்தது.

தற்போது ஜி ஜின்பிங் அதிபர் பதவியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் சீனாவில் தற்போதும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட நிலையில், சீனாவில் மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொருளாதார வளர்ச்சியும் குறைந்திருக்கிறது. இதனால் அங்கு எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. மேலும் அவர் கடைப்பிடித்து வரும் கோவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

சீன மொழியில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கும் பதாகையில், ``கொரோனா பரிசோதனை வேண்டாம், உணவு வேண்டும். லாக்டெளன் வேண்டாம், சுதந்திரம் வேண்டும். பொய்கள் வேண்டாம், கண்ணியம் வேண்டும். கலாசாரப் புரட்சி வேண்டாம், சீர்திருத்தம் வேண்டும். பெரும் தலைவர் வேண்டாம், ஓட்டுரிமை வேண்டும். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு" என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் இந்தப் பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதே பாலத்தில் தொங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு பதாகையில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத்துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் "I saw it" என்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டானது.. எனினும், இதற்கு காரணமானவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இவ்வாறு ஒருபுறம் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங்கே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. அதாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடக்கும்.

மாதிரி படம்

அப்போது அக்கட்சியின் புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். தற்போது ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச்செயலராகவும் உள்ளார். சீனாவில் அதிபர் பொறுப்பைவிடவும் கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, பீஜிங் கிரேட் ஹாலில் நேற்று தொடங்கியது. ஒரு வாரத்திற்கு இக்கூட்டம் நடைபெறும்.

இந்த மாநாட்டில் 2,300 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பலத்த கரகோஷங்களுக்கு இடையே ஜி ஜின்பிங் வருகை தந்தார். அப்போது உரையாற்றிய ஜி ஜின்பிங், ``ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தைவான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

தைவான் பிரச்னையில் சீன மக்கள்தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். சீனாவின் ஜீரோ கோவிட் நிலைப்பாடு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மக்களும், அவர்களின் உயிரும் நலனும்தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது.

அதனால் ஜீரோ கோவிட் உத்தி மூலம் சீனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகள் சீனப் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் சீனா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஒரு நவீன சோஷலிச சக்தியை கட்டமைக்க பாடுபடும்" என்றார்.

மாதிரி படம்

முன்னதாக நடைபெற்றுவரும் தேசிய மாநாட்டில் மீண்டும் ஜி ஜின்பிங்கே பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்றும், அதனடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

ஒருபுறம் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் சீனாவில் நடப்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.