கஸ்தூரியின் சர்ச்சைப் பதிவு- வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்
Kasthuri's Controversy Record- The famous director who was grilled
நடிகை கஸ்தூரி ஒரு நடிகை என்ற போதிலும் சமூகம் சார்ந்த அரசியல் கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்துவார். பல நேரங்களில் அவரது கருத்துக்கள் சர்ச்சையாகியிருக்கிறது. பல எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டில் உறுத்தியாக இருப்பவர் கஸ்தூரி. இந்த நிலையில் சமீபத்தில் கஸ்தூரி பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நிறைய பட்டாசு வெடிங்க .. ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? "விடுமுறை நாள் ' னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான்’ என்று பதிவிட்டார்.
பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது?
— Kasturi Shankar (@KasthuriShankar) October 23, 2022
"விடுமுறை நாள் ' னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான் ????????
????????????????????????#happydeepavali https://t.co/eMrdpk4qKM
கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவி சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.இதற்கு பதிலளிக்கும் வகையில் , மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியின் பதிவை மேற்கோள் காட்டி,
தேவிடியா பசங்க என்பதைதான் திராவிடியா பசங்க என்று கஸ்தூரி
எழுதியுள்ளார். ஒரு பெண்ணாக பெண்களை அவர் மதிக்கும் பண்பு வியக்க வைக்கிறது. தேவரடியார் (தேவதாசி) எனும் சொல் தேவிடியாள் ஆனது. அந்த தேவதாசிமுறையை ஒழித்ததால் பெரியாரை வெறுக்கிறேன் என்று ஒரு பெண் சமீபத்தில் கூறினார்.தேவிடியாள் எனும் சொல் இன்று பொதுபுத்தியில் ஒரு கொச்சை சொல். ஒரு பெண் பத்து ஆண்களுடன் உடலுறவு கொள்வது அவள் தனிப்பட்ட விருப்பம். அதை கொச்சையாக பேசுவது ஆணாதிக்க மனோபாவம். அந்த கேடுகெட்ட தன்மை பெண்களிடமும் இருப்பது வருத்தம் தருகிறது.இவர்கள் சேரி பிகேவியர் என்று சொல்லும் ஆட்கள் இந்தச் சொல்லை உபயோகிக்கும்போது அது இண்டீசன்சி. அதே சொல்லை இவர்கள் பயன்படுத்தினால் அது டீசன்சி. சொல்லுக்கு அர்த்தம் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சேரியில் ஒரு அப்பன் தன் குழந்தை கன்னத்தை கிள்ளி தேவ்டியா பய்யா என்று சொல்லும்போது. அங்கு நான் அன்பை மட்டுமே எணர்கிறேன். ஆனால் கஸ்தூரி அவர்கள் சொல்லும் திராவிடியா பசங்க விஷம் நிறைந்தது. அவருக்கு வரலாறும் அரசியலும் தெரியாதது வருத்தம் தரவில்லை. ஆனால் இங்கிதம் தெரியாதது வருத்தம் தருகிறது (வியப்பு நிச்சயம் இல்லை)’ என்று பதிவிட்டுள்ளார்.