தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களுக்கு தீபாவளி வாழ்த்து அறிக்கை

Tamil Nadu BJP President's message to the people of Annamalai on Diwali

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களுக்கு தீபாவளி வாழ்த்து அறிக்கை
google

தீபஒளித் திரு நாளை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- 

தமசுவமா! ஜோதிர்க்கமையா என்று இருளிலிருந்து ஒளிமயத்திற்கு செல்வதற்கு இறையருள் வேண்டி, நடத்தப்படும் இனிமையான திருவிழா தீபாவளி. பல்வேறு இடர்பாடுகளை கடந்து நாம் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழ புத்துணர்வூட்டும்  திருவிழா.. தீபாவளி. இல்லம்தோறும் இனிமை பொங்க, ஒளி வெள்ளம் பெருக, துன்பங்களை கரைய, துயரங்கள் களைய, மதங்களைக் கடந்த மனிதநேயத்தோடு, மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழா தீபாவளி.  இந்த இனிய வேளையில் அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தேசத்தை உலக நாடுகள் மத்தியில் உன்னதமான இடத்திற்கு உயர்த்த பாடுபடும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்போம். ஒளிமயமான பாரதத்தை உருவாக்கும் நம் பாரத பிரதமர் முயற்சிகளுக்கு ஒற்றுமையுடன் கை கொடுப்போம் என்று அண்ணாமலை அவர்கள் தன்னுடைய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்